03 பெற்றவரை பேணி் காத்திடுவோம்

முதிர்ந்துப்போன இலைகள்
உதிர்ந்துப் போனதறிவோம் – ஆனால்
உதிர்ந்துப்போன இலைகள்தாம்
உதித்திருக்கும் இளந்தளிர்களுக்கு
உரமாய் இருப்பதென்பதை
உணர்ந்தவர் யவரோ?

கனிந்திருந்த மேகங்கள்
கலைந்துப் போனதறிவோம் – ஆனால்
கலைந்துப்போன மேகங்கள்தாம்
மழையாய் பொழிந்த துளிகளுக்கு
அடிப்படையாய் இருந்ததென்பதை
அறிந்தோர் யவரோ?

காலம் கடந்த சிப்பிகள்
சிதறிக் கிடப்பதறிவோம் -ஆனால்
சிதறிக்கிடக்கும் சிப்பிகள்தாம்
விலைமிகுந்த முத்துக்களுக்கு
வீடாய் இருந்ததென்பதை
விளிந்தவர் யவரோ?

வாடிவிழுந்த வண்ணமலர்கள்
காற்றினில் பறப்பதறிவோம் – ஆனால்
காற்றினில் பறந்தமலர்கள்தாம்
தேன்சுவைநிறைந்த கனிகளுக்கு
அன்னையா யிருந்ததை
சொன்னோர் யவரோ?

வயதுநிறைந்த பெற்றோர்
வலுவிழந்திருப்ப தறிவோம் — ஆனால்
வலுவிழந்தப் பெற்றோர்தாம்
வலிமை நிறைந்த
நம் வாழ்க்கைக்கு
ஒளிவிளக்கு யென்பதை
உணர்வீரே தோழர்களே…

தலை கலைந்து
தேகம் சுருங்கி
கலங்கிய கண்ணோடு
கையேந்தும் முதியோர்யில்லா
வையகம் படைத்திட
உறுதி கொள்ளுவோம்
பெற்றவரை பேணி் காத்திடுவோம்

1 Comment

  1. Kousik Sankaran said,

    Its penni (vallinam) not peni :)

    Keep going…! Superb !

Post a Comment