10 எல்லைச் சண்டை
வயலோர வரப்புச் சண்டை
வர்ணித்தன தினசரிகள்
படிக்காத பாமரன்களுக்கிடையே
பங்காளிச் சண்டையென்று
நாட்டின் எல்லைச் சண்டை
நயம்படச் சொல்லின தினசரிகள்
தேசப்பற்றென்று…எது சரி?
புரிந்தும் புரியாமலும்
நோக்கினேன் சுவற்றை
புன்சிரிப்போடு புத்தர்……..
கார்த்திக் said,
September 17, 2008 at 10:04 am
அனைத்து கவிதைகளையும் நான்கு வரிகளில் கவிதை எழுதினால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்….